89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கும்பகோணத்திலிருந்து 2-வது வாராமாக 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம்

கும்பகோணத்திலிருந்து 2-வது வாராமாக 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம்

கும்பகோணம்: அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கும்பகோணம் பகுதியில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கான 2-வது கட்ட ஆன்மிக பயணம் இன்று தொடங்கப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் கும்பகோணம் பகுதியில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று கும்பகோணம் சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள், திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், ஒப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி கோயில், நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோயில் ஆகிய 5 வைணவ கோயில்களுக்கு 3 வாகனங்களில் 37 பக்தர்கள் இன்று ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/awVDWk8
via IFTTT