பூஜையில் முதலிடம் வகிப்பவர் கணபதி பெருமான். எந்தத் தெய்வத்தை நினைத்து பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாருக்குத்தான் பூஜைகள் செய்வோம். எந்தக் கடவுளுக்கு ஹோமங்கள் செய்தாலும் முதலில் பிள்ளையாரை அழைத்து அமரவைத்துத்தான் நம் ஹோம பூஜைகளை மேற்கொள்வோம்.
அதேபோல், பிள்ளையார் சிலை இருக்க வேண்டும் என்பதெல்லாம் கூட இல்லை. ஒரு மஞ்சளில் கூட பிள்ளையாராக பாவித்து பிடித்து வைத்து பூக்களால் அர்ச்சித்து வழிபட்டாலே, அந்த பூஜையில் கணபதி பெருமான் வந்து அமர்ந்து கொள்வதாகவும் அந்த ஹோமமோ பூஜையோ நிறைவுற நடப்பதற்கு அவரே உறுதுணையாக இருப்பார் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KIbMk6
via IFTTT