89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழியில் தினமும் வழிபடுவோம்!  இல்லத்தில் சுபிட்சமும் மங்கல காரியங்களும் நிச்சயம்!

மார்கழியில் தினமும் வழிபடுவோம்!  இல்லத்தில் சுபிட்சமும் மங்கல காரியங்களும் நிச்சயம்!

அற்புதமான மார்கழி மாதம் நாளைய தினம் 17ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. மார்கழிப் பிறப்பில், ஒவ்வொரு நாளும் மகாவிஷ்ணுவை வழிபடுவோம். சிவனாரை தரிசித்துப் பிரார்த்திப்போம். பெருமாளுக்கு திருப்பாவை பாடுவது விசேஷம் எனில், சிவனாருக்கு திருவெம்பாவை பாடுவது சிறப்பு. ஆகவே, தினமும் திருப்பாவை பாடுங்கள். திருவெம்பாவை பாடுங்கள். சிவனாரையும் விஷ்ணுவையும் மனதார வேண்டுங்கள்.

மார்கழி மாதம் என்பது தபஸ் செய்வதற்கு ஏற்ற காலம். மார்கழி என்பது புதிதாகக் கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு தொடங்குகிற காலம். மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கும் பூஜைகளுக்கும் உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் நம் மனதைச் செலுத்துவது நம் அடுத்தடுத்த வாழ்க்கையை இனிமையாகவும் அமைதியாகவும் செலுத்துவதற்கு இறை சக்தி துணை நிற்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34fShG9
via IFTTT