காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா இன்று (செப்டம்பர் 28-ம் தேதி) நடைபெற்றது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் ஆண்டு தோறும் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நான்காம் ஆண்டு நால்வர் இசைத்தமிழ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கத்தின் தலைவர் ப.சண்முகசுந்தர தேசிகர் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் ஓதுவார்கள் தி.ஆடலரசன், ராஜபதி, கதிர்வேல் சுப்பிரமணியன், ஆ.லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழாவையொட்டி நால்வர் சிலைகளை ஊர்வலமாக ஓதுவாமூர்த்திகள் எடுத்து வந்தனர். கச்சபேஸ்வரர் ஆலயத்தை வலம் வந்து ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vGRm5Ck
via IFTTT