பழநி: அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் வந்த மூத்த குடிமக்கள் பழநி முருகன் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களுக்குக் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைக்கும் திட்டத்தை அறநிலையத்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4-ம் கட்டமாக அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி சுவாமிமலையில் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LuAbWzE
via IFTTT