89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அமைந்துள்ளது வெயிலுகந்தம்மன் திருக்கோயில். சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு அன்னை பராசக்தி, காட்சி கொடுத்த திருத்தலம் இது. சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் இக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜை செய்து, அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம்.

‘வேல் ஈந்த அம்மன்’ என்ற சொல்லே, ‘வேலீந்த அம்மன்’ என்றாகி, பின் ‘வெயிலுகந்த அம்மன்’ ஆக மாறியதாக கூறப்படுகிறது. தனது அன்னைக்கு நித்திய பூஜை செய்வதற்காக பாரசைவர்களை சுப்பிரமணிய சுவாமியே நியமித்ததாக திருக்கோயில் வரலாறு கூறுகிறது. அன்று முதல் அம்பாளுக்கு பாரம்பரியமாக யாமள ஆகம முறைப்படி பாரசைவர்கள் நித்திய பூஜை செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0PEfG9L
via IFTTT