89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தைப்பூசம் ஸ்பெஷல் ; இழந்ததைத் தருவார் தணிகைவேலன்! 

தைப்பூசம் ஸ்பெஷல் ; இழந்ததைத் தருவார் தணிகைவேலன்! 

படைப்புக்கடவுளான பிரம்மா, இந்தத் தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார் என்றும் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றார் என்றும் சூரபத்மனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் செல்வங்களை மீண்டும் பெற்றார் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம். பிரம்மா, பூஜிப்பதற்கு உண்டுபண்ணிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. எனவே திருத்தணி முருகக் கடவுளை வணங்கினால், இழந்ததையெல்லாம் மீண்டும் பெறலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் 60 படிகள் அமைந்துள்ளன. தமிழ் மாதங்கள் மொத்தம் அறுபது. இதைக் குறிக்கும் வகையில் அறுபது படிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஒரு வருடத்தின் நாட்கள் 365. திருத்தணி முருகப்பெருமான் கோயிலில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t0eHWC
via IFTTT