தைப்பூச நன்னாளில் முருக வழிபாடு செய்வது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தைப்பூச நாளில், வீட்டில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் தொல்லை ஒழியும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வாழ்வில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருளுவார் முருகக்கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
முருகக் கடவுளைக் கொண்டாடவும் வழிபடவும் பல விழாக்கள் இருக்கின்றன. விசேஷங்கள் ஏராளம் அமைந்துள்ளன. ஆடிக் கிருத்திகையும் ஐப்பசி சஷ்டியும் வைகாசி விசாகமும் பங்குனி உத்திரமும் என முருகப்பெருமானுக்கு திருவிழாக்கள் ஏராளம். இந்த விழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oidmGV
via IFTTT