நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ளது தந்தி மாரியம்மன் கோயில். குளிர்ந்த அடர்ந்த காட்டுப் பகுதியை அங்கிலேயர்கள் திருத்திய போது, சிறிய ஊராக இது இருந்தது. எனவே இதை ‘குன்னூர்' என அழைத்தனர். ‘குன்னூர்' என்றால் ‘சிறிய ஊர்’ என பொருள்படும்.
இங்கு அம்பாளுக்கு கோயில் கட்டியபோது, அதன் அருகில் ஆங்கிலேயர்கள் ‘தந்திக்கம்பம்’ ஒன்றை இவ்விடத்தில் நட்டனர். இதனால், இங்கிருக்கும் அம்பாள் ஆதியில் ‘தந்தி மாரியம்மன்’ என்ற திருப்பெயரில் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் அப்பெயரே நிலைத்து விட்டது. ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தந்திக் கம்பம், இன்று வரையிலும் கோயிலுக்கு அருகே உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Eaul4L9
via IFTTT