பழநி: பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் உள்ள ஶ்ரீ மகாலட்சுமி கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே பெரியகலையம்புத்தூரில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HctTUJj
via IFTTT