89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: சுவாமிமலையில் இருந்து புறப்பட்ட பக்தர்கள்

அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: சுவாமிமலையில் இருந்து புறப்பட்ட பக்தர்கள்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் இருந்து அறுபடை வீடுகளுக்குச் செல்லும் ஆன்மிக சுற்றுலாப் பேருந்து இன்று (ஆக.7) புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 6 பேருந்துகளில், 204 பக்தர்கள் உட்பட 236 பேர் புறப்பட்டுச் சென்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆன்மிக சுற்றுலா பயணம் உரிய வசதிகள் செய்து கொடுத்து அழைத்துச் செல்லப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுவாமிமலை முருகன் கோயிலில் இருந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 204 பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட மொத்தம் 236 பேர், 6 பேருந்துகளில் இன்று முருகனின் அறுபடை வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SQk8Wdj
via IFTTT