கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் ஊராட்சி தெற்கு மேட்டுமகாதானபுரத்தில் உள்ளது ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்தக் கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலில் ஸ்ரீ ராமசாமி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ வீரபத்ரர், ஸ்ரீ கால பைரவர் சந்நிதிகள் உள்ளன.
பல நூறாண்டுகளுக்கு முன் இப்பகுதி மேய்ச்சல் நிலமாக இருந்தபோது, கால்நடைகள் குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்ததால், அந்த இடத்தை அப்பகுதி மக்கள் மண்வெட்டியால் தோண்டிப் பார்த்தபோது, பூமிக்கு அடியில் சுயம்புவாக மகாலட்சுமி அம்மன் சிலை வெளிப்பட்டது. அப்போது, மண்வெட்டி பட்டதால் சுயம்பு மகாலட்சுமியின் இடது காது சேதமடைந்த நிலையில் உள்ளது. பின்னர், அந்தச் சிலையை நிறுவி, கோயில் கட்டி பூஜைகள் செய்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C7bAU0E
via IFTTT