மைசூரு, குலசேகரப்பட்டினம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக நெல்லை - பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த தசரா விழாவின் முக்கியத் தலமாக இந்த ஆயிரத்தம்மன் திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், ஆரம்ப காலத்தில் பட்டாளத்து திடல் என்றழைக்கப்படும் எருமைக்கடா மைதானத்தில் எழுந்தருளி இருந்ததாகவும், பின்னர்தான் தற்போதைய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
இப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின்போது படைவீரர்கள் சூழ்ந்து வாழ்ந்த இடமாக இருந்துள்ளது. இதனால் பட்டாளத்திடல் என்று அழைத்திருக்கிறார்கள். அப்பகுதியில் ஒரு ஓலை குடிசையில் அம்மன் வீற்றிருக்க, ஆயிரம் பட்டாள வீரர்கள் வழிபட்டதால் அம்மனுக்கு ‘ஆயிரத்தம்மன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KlHACVB
via IFTTT