89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மதுரை புதுமண்டப சிற்பங்களை கோட்டோவிய நூலாக்கிய ஓவியரின் 2-வது நூல் வெளியீடு

மதுரை புதுமண்டப சிற்பங்களை கோட்டோவிய நூலாக்கிய ஓவியரின் 2-வது நூல் வெளியீடு

மதுரை: மதுரை புதுமண்டபத்தில் உள்ள கலைச் சிற்பங்களை கோட்டோவியமாக வரைந்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தவர் மதுரை ஓவியர் மு.ரத்தினபாஸ்கர்.

இவர் அதே புதுமண்டபத்திலுள்ள 744 புடைப்புச் சிற்பங்களை கோட்டோவியங்களாக வரைந்து ‘உளி ஓவியங்கள் 2’ என்ற இரண்டாம் பாகமாக தமிழ், ஆங்கில பதிப்புகளில் வெளியிட்டு மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். தொன்மை நகரான மதுரையின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், புதுமண்டபம், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம் உள்ளிட்டவை திகழ்கின்றன. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை மீனாட்சி அம்மனே வந்து குணமாக்கினார் என்ற நம்பிக்கையால் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமான மானியங்களை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lNh8zkW
via IFTTT