89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏழை மாற்றுத்திறனாளியை போர்ஷ் காரில் அழைத்து சென்ற யூடியூபர்: இதயப்பூர்வமாக பாராட்டிய இணையவாசிகள்

ஏழை மாற்றுத்திறனாளியை போர்ஷ் காரில் அழைத்து சென்ற யூடியூபர்: இதயப்பூர்வமாக பாராட்டிய இணையவாசிகள்

புதுடெல்லி: யூடியூபில் மக்களிடம் செல்வாக்குசெலுத்தக்கூடிய நபரை இன்ப்ளூயன்சர் என்று அழைக்கின்றனர். அந்த வகையில் ஏழைகளுக்கு உதவுவதை ஆண்டு முழுவதும் குறிக்கோளாக கொண்டு ஒவ்வொரு நாளும் கடைக்கோடியில் உள்ள ஏதோவொரு மனிதருக்கு உதவுவதை சீனு மாலிக் தனது வாழ்நாள் லட்சியமாக கடைப்பிடித்து வருகிறார். நாள் 221/365-ல் அவர் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ஆடம்பரமான மஞ்சள் நிற போர்ஷ் காரை பார்த்தமாற்றுத்திறனாளி ஒருவர் அதன்முன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால், அதற்குள் அந்தகாரின் உரிமையாளர் வந்து ‘என்னசெய்கிறீர்கள்' என்று கேள்வியெழுப்பு கிறார். இதனைப் பார்த்து பயந்த மாற்றுத்திறனாளி புகைப்படம் எடுத்ததற்காக காரின் உரிமையாளர்தன்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில் ஓடுகிறார். அவரை துரத்திச் சென்றகாரின் உரிமையாளர் மாற்றுத்திறனாளியின் மொபைல் போனை பறித்துஅதில் உள்ள படங்களை பார்க்கிறார்.எடுத்த படங்களை அழித்துவிட்டு தன்னையும் தாக்குவார் என்ற பயம்அவரின் முகத்தில் நிறைந்திருந்தது.ஆனால், அவர் நினைத்தற்குமாறாக மாற்றுத்திறனாளியை கூட்டிச்சென்று காரின் அருகே, உள்ளே எனபல கோணங்களில் உட்கார வைத்து உரிமையாளரே புகைப்படம் எடுத்து அவரிடம் கொடுக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YzPfZmk
via IFTTT