திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் முனுகப்பட்டு கிராமத்தில் பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் உள்ளது. முன்னொரு காலத்தில், தீவிர சிவ பக்தரான பிருங்கி முனிவர், சிவனை வழிபட்டு விட்டு, பார்வதி தேவியை வழிபடாமல் சென்றார்.
இதனால், வருத்தமடைந்த பார்வதி தேவி, தனக்கும் முக்கியத்துவம் தர சிவனின் உடலில் சரிபாதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதற்கு சிவன் செவிசாய்க்கவில்லை. எப்படியும் சிவனின் உடலில் சரிபாதியை பெற்றிட வேண்டி, செய்யாறு அருகே முனுகப்பட்டு பகுதியில் வாழைத் தோட்டங்களுக்கு நடுவில் மண்ணால் சிவலிங்கத்தை தோற்றுவித்து பூஜை செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1D3qSR4
via IFTTT