89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நூல் இழைகளால் காமராஜர் உருவத்தை வரைந்து அசத்திய வத்திராயிருப்பு மாணவர்!

நூல் இழைகளால் காமராஜர் உருவத்தை வரைந்து அசத்திய வத்திராயிருப்பு மாணவர்!

வத்திராயிருப்பு: காமராஜரின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர் ஜெகதீசன், நூல் இழைகளை கொண்டு உருவாக்கிய காமராஜரின் படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் ஜெகதீசன் (15). செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் ஜெகதீசன் தாயுடன் தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். ஜெகதீசன் வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார். இன்று காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெகதீசன் ஒரு பலகையில் நூல்களை கட்டி ஆசிரியர்களிடம் வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/71IVMSl
via IFTTT