தை செவ்வாய்க்கிழமையில், அம்பாளைத் தரிசிப்பது விசேஷம். செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கு உரிய நாள். சிவபெருமான் பிரதோஷ வழிபாட்டுக்கு உரியவர். இந்த மூவருக்குமான நாளில், அவர்களை வணங்குவோம். அல்லல்களையெல்லாம் தீர்த்து வைப்பார்கள். இன்னல்களையெல்லாம் போக்கி அருளுவார்கள்.
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய நாள். அம்பாளைத் தரிசிப்பதற்கு உகந்தநாள். சக்தியை வழிபடுவதற்கு உரிய நாள். உலகில் உள்ள அம்பாளையும் அம்மனையும் மாரியம்மனையும் ஆராதனைகள் மேற்கொள்வதற்கு மிகச்சிறப்பான நாள் என்று செவ்வாய்க்கிழமையைப் போற்றுவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cP6Vt0
via IFTTT