தை பிரதோஷ நன்னாளில், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டுவோம். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். சுபிட்சமும் நிம்மதியும் பெறலாம்.
சிவபெருமானை வழிபட பல முக்கிய தினங்கள் இருக்கின்றன. மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவபெருமானை விரதம் இருந்து மேற்கொள்வார்கள் பக்தர்கள். அதேபோல், ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திர நாளும் சிவனாருக்கு உகந்த நாட்கள். இந்தநாளிலும் பக்தர்கள், சிவ தரிசனம் செய்வதும் சிவாலயத்தில் நடைபெறுகிற பூஜைக்கு உதவுவதும் மிகச்சிறந்த பலன்களை வழங்கும்.
மாதத்தில் சிவராத்திரியும் நட்சத்திரத்தில் திருவாதிரையும் விசேஷமான நாட்கள். சிவ வழிபாட்டுக்கு உகந்தநாட்கள். அதேபோல், திதியில் திரயோதசி ரொம்பவே விசேஷமான நாள். திரயோதசி திதியைத்தான், பிரதோஷம் என்று கொண்டாடுகின்றனர் சிவனடியார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Zc91eB
via IFTTT