அமாவாசையிலும் பெளர்ணமியிலும் சிவ வழிபாடு ரொம்பவே உகந்தது. அமாவாசையும் விசேஷம். பெளர்ணமியும் விசேஷம்.
இந்த நாட்களில், ஒவ்வொரு மாத அமாவாசை பெளர்ணமி என்பதில் உரிய மலர்கள் கொண்டு சிவ பூஜை செய்தால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
சித்திரை மாதத்தில் மரிக்கொழுந்து கொண்டு அமாவாசையிலும் பெளர்ணமியிலும் சிவபூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். வைகாசி மாதத்தில் சந்தனம் கொண்டு சிவனாருக்கு அபிஷேகம் செய்தால் சகல துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். ஆனி மாதத்தில் முக்கனிகள் கொண்டு அபிஷேகம் செய்தும் நைவேத்தியம் செய்தும் வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்தும் மீளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LyTfXL
via IFTTT