கோவை: கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்குச் சொந்தமான இடத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ‘கலைஞர் நூலகம்’ அமையும் என நூலக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை நகரம் இரண்டாம் நிலைநகரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜவுளி, மோட்டார் பம்ப்செட், ஜவுளி இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஐடி நிறுவனங்கள் என பன்முகதொழில்துறைகளை கொண்டதாகவும், சென்னைக்கு அடுத்து தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுவாக உள்ள நகரமாகவும் கோவை விளங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gYImfDP
via IFTTT