சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.
மகத்துவம் வாய்ந்த ஆடிமாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்கள் நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hdI9GwY
via IFTTT