சென்னை வில்லிவாக்கத்தில் பழமை வாய்ந்த சக்தி தலமாக இருப்பது ஸ்ரீ பாலியம்மன் திருக்கோயில். பாலியம்மன் இங்கு கைகளில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தி பக்தர்களுக்கு காட்சித் தருகிறார்.
பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும் என்ற நம்பிக்கை உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், செய்வினை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பாலியம்மனை மனமுருகி வேண்டி அபிஷேகம் செய்தால், அங்கப்பிரதட்சணம் செய்தால் பிரச்சினைகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. எந்தவகையான நீங்க வேண்டிய குணாதிசயங்கள் இருந்தாலும், இந்த மண்ணை மிதித்தால், அவர்களின் குணங்கள் மாறி அன்னையின் அருள் அவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0nON8Tv
via IFTTT