கோவை: இவ்வுலகில் நோயின்றி வாழ வேண்டுமானால் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது அவசியமாகும். நல்ல பழக்க வழக்கம் என்பது சுத்தத்தை பேணிக் காப்பதே ஆகும். ஆரோக்கியமாய் வாழ்வதற்குச் சுத்தமாய் இருப்பது அவசியமாகும். பொதுவாய், சுத்தமாய் இருத்தல் என்பது ஒருவர் தன் உடம்பை அதாவது தோல் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளான முடி, கால், கை, நகங்கள் மற்றும் வாயையும் சுத்தமாக வைத்திருப்பதாகும். குழந்தைப் பருவத்தில் உடம்பை எப்படிச் சுத்தம் செய்வது என்று அறியாததாலேயே பெரும்பாலான நோய்கள் வருகின்றன.
பள்ளிக் குழந்தைகளுக்கான சுகாதாரப் பழக்க வழக்கங்கள் குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் குழந்தைகள் மருத்துவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: நல்ல ஆரோக்கியமான வாழ்வுக்குச் சுத்தமாய் இருத்தல் அவசியம். சுத்தமாகவும், நல்ல தோற்றத்துடனும் இருப்பதே நமது கலாச்சாரம். தினமும் பல் துலக்குவதால், பல் சொத்தை ஈறுகளில் ரத்தக் கசிவு, வாய் துர்நாற்றம் இல்லாமல் ஆரோக்கியமாய் இருக்க முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oCSVaQT
via IFTTT