கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியுடன் சொரூபமாக, லலிதா பரமேஸ்வரி அம்மன் மற்றும் முத்துமாரி அம்மன், கனக துர்க்கை அம்மனுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. இங்கு, லலிதா பரமேஸ்வரி சமேத மாமரத்தீஸ்வருடன் அருள் பாலிக்கிறார்.
ஆடி மாதத்தில் இங்குள்ள அனைத்து அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரியில் ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் சண்டி யாகம், தேவி மகாத்மியம் பாராயணம் என ஒவ்வொரு நாளும் களை கட்டும். இதில், நெய்க்குளம் தரிசனம் மிக சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C5nhAX
via IFTTT