கும்பகோணம்: ஆடி மாதத்தின் முதல் வெள்ளியையொட்டி, கும்பகோணம் கோட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆடி மாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பான நாளாகும். ஆடி வெள்ளியில் பெண்கள் ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். அதனால் ஆடியில் திருமணம் ஆன பெண்கள் அம்மன் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்மனைத் தரிசனம் செய்ய விரதமிருப்பது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4Du0vjc
via IFTTT