89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா பிரசித்தி பெற்றது. ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திர நாளில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BCuLPW5
via IFTTT