மதுரை: மதுரை அழகர்கோவிலில் நேற்று கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கள்ளழகர் கோயிலில் சித்திரை மாத பவுர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஆடிப் பவுர்ணமியன்று நடைபெறும் தேரோட்டமும் சிறப்புக்குரியவையாகும். இவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ew1sFNV
via IFTTT