சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவத்தில் இன்று காலை செப்பு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் அவதார நட்சத்திரம் திருவிழாவாக ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆண்டு ஆனி சுவாதி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8LureO2
via IFTTT