கடலூர்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
பூலோக கைலாயம் என்று போற்றப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கடந்த 3-ம் தேதி சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிவ கு.த.கு.கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடி ஏற்றினார். அதன் பிறகு, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 4-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 5-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 6-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலாவும், 7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dz9LwcJ
via IFTTT