சென்னை: திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், ஆலங்குடி, குருபகவான் திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு நாளை (ஜூலை 12) குடமுழுக்கு நடைபெறும் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு நாளை (ஜூலை 12) வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jUSKOqw
via IFTTT