89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பனகல் அரசரின் 3 மைல்கல் சாதனைகள்!

பனகல் அரசரின் 3 மைல்கல் சாதனைகள்!

சென்னைப் பெருநகரின், தியாகராய நகர் இன்று முக்கிய ‘ஷாப்பிங் ஏரியா’வாக புகழ் பெற்று விளங்குகிறது. குறிப்பாக பனகல் பூங்கா அதன் மையமாக அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பூங்காவைப் பல்லடுக்கு வாகன நிறுத்தமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்தபோது மக்கள் எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இன்று சென்னை பெருநகராக மாறிய நிலையில் ‘மெட்ரோ’ ரயிலின் தேவை அதிகரித்துவிட்டதால், பனகல் பூங்காவை மெட்ரோ நிலைய முனையமாக மாறுகிறது. அதற்கும் பனகல் மெட்ரோ என்றே பெயரிடுகிறார்கள். எத்தனை மாற்றங்களை எடுத்தாலும் பனகல் என்கிற பெயர் என்றைக்கும் மாறப்போவதில்லை. காரணம், பனகல் அரசரின் தரமான செயல் அப்படி!

சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை ராஜதானி அல்லது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமராக (முதல்வர்) பதவியேற்றுச் சிறப்பான ஆட்சியை வழங்கியவர். ஜூலை 9ஆம் தேதியான இன்று அவருக்குப் பிறந்த நாள். ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அப்போதைய முதலமைச்சர் சுப்பராயலு உடல்நிலை காரணமாகப் பதவி விலகினார். இதையடுத்து ஏப்ரல் 11, 1921 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் பனகல் அரசர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8CIQYtr
via IFTTT