சென்னை: இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகந்நாதர் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்டுதோறும் ஜெகந்நாதர் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
அந்தவகையில், சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள இஸ்கான் கோயில் சார்பில் 44-வது ஜெகந்நாதர் ரத யாத்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தி வினோதசுவாமி மஹாராஜர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதியம் 2.30 மணிஅளவில் பாலவாக்கத்தில் ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OAwZ8et
via IFTTT