தேவி காளையை அடக்கி அழித்த கதை நமக்குத் தெரியும். இங்கு காளை தும்ரலோசனைக் குறிக்கிறது (மகிஷாசுரனின் சோம்பல் மற்றும் குறுகிய மனப்பான்மையால் கண்மூடித்தனமாக இருப்பவன்). பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகியோரின் கூட்டு ஆற்றலுடன் தெய்வீக அன்னை மட்டுமே இதனை அழிக்க முடியும். ஒரு குழந்தை பிறப்பதற்கு ஒன்பது மாதங்கள் ஆவதைப் போல, தேவி ஒன்பது நாட்கள் ஓய்வெடுத்து பத்தாம் நாளில் பிறந்தது தான் தூய்மையான அன்பும் பக்தியும். இதன்மூலம் தேவி செயலற்ற தன்மை மற்றும் மந்தமான காளையை வெற்றி காண்கிறாள்.
நவராத்திரி என்பது சுய-அலசலுக்கான நேரம். மனதை மீண்டும் மூலத்திற்கு கொண்டு வருவதும் ஆகும். நுட்பமான படைப்பை நிர்வகிக்கும் 64 தெய்வீக தூண்டுதல்கள் உள்ளன. பூமிக்குரிய மற்றும் ஆன்மீக நன்மைகள் அனைத்தையும் மீட்டெடுப்பதற்கு இவை பொறுப்புடையவை ஆகும். உண்மையில் அது ஒருவரின் விழிப்புணர்வின் ஒரு பகுதியாகும். இந்த ஒன்பது இரவுகள் அந்த தெய்வீக தூண்டுதல்களை மீண்டும் தட்டியெழுப்பவும், நம் வாழ்வின் ஆழத்தை அனுபவிக்கவும் கொண்டாடப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cG7TWl1
via IFTTT