மதுரை: மதுரையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் 'பொன்னியின் செல்வன்' புத்தகம் வாங்க ஆர்வம் அதிகரித்ததால் தினமும் 3,000 முதல் 5,000 வரையிலான புத்தகங்கள் விற்பனையாகின.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் சூழலில், முதல் பாகம் தற்போது திரையரங்குகளில் ஓடுகிறது. இந்நாவல் ஐந்து பாகங்களைக் கொண்டது என்றாலும், நூலின் இரண்டு பாகங்களில் இடம்பெற்றவையே படத்தின் முதல் பாகமாக வந்துள்ளது. எஞ்சிய 3 பாகங்களின் கதையை உள்ளடக்கி அடுத்த ஆண்டு ‘பொன்னியின் செல்வன் - பாகம் 2’ என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fx7DsAw
via IFTTT