பல நாட்களாகவோ பல மாதங்களாகவோ பல ஆண்டுகளாகவோ கொடிய நோயுடன் போராடிக் கொண்டும், சிகிச்சையிலும் இருக்கும் குழந்தைக்கு நீங்கள் என்ன பரிசளிப்பீர்கள் ? பொம்மைகளா? புத்தகங்களா? சாக்லேட்டுகள்? - சரி, இவை அனைத்தும் அந்தக் குழந்தையை உற்சாகப்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், சிகிச்சையிலிருந்து ஓய்வு எடுக்க விரும்பும் அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சியைத் திரும்பக் கொண்டுவந்து, அவர்களுக்கு நம்பிக்கையின் கதிரை வழங்கக்கூடிய ஒன்று எதுவாக இருக்கும்? மற்ற குழந்தைகளைப் போலவே வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டாட வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுதானே அந்தக் குழந்தைகளுக்கான சிறந்த பரிசாக இருக்க முடியும்!
அத்தகைய சிறந்த பரிசையே மரண வலியுடன் போராடும் குழந்தைகளுக்கு ’கோல்டன் பட்டர்ஃபிளைஸ் சில்ட்ரன் பாலியேட்டிவ் கேர்’ எனும் அறக்கட்டளை இன்று சென்னையில் அளித்துள்ளது. குழந்தைகளுக்கான பேலியேட்டிவ் கேர் எனப்படும் ‘மரண வலி தணிப்புச் சிகிச்சை' சேவையை ஆற்றுவதே இந்தப் பொது தொண்டு அறக்கட்டளையின் நோக்கம். அந்த அமைப்பு முதன்முறையாக, அந்தக் குழந்தைகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் பங்கேற்கும் விதமாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு சுவாராஸியமான விளையாட்டுகள் நிறைந்த கேளிக்கை நிகழ்வை இன்று சென்னையில் நடத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K5BxIt8
via IFTTT