89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கோமளவல்லி தாயாரை தரிசித்தால் கல்யாண வரம்! 

கோமளவல்லி தாயாரை தரிசித்தால் கல்யாண வரம்! 

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாளையும் ஸ்ரீகோமளவல்லித் தாயாரையும் ஒருமுறையேனும் தரிசித்து மனதார வழிபட்டாலே... திருமணத் தடைகள் அகலும். இல்லத்தில் மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தேவலோகப்பட்டணம், மந்திராதி தேவதா ஸ்தானம், க்ஷேத்ரஸாரம், சாரங்கராஜன் பட்டணம், பாஸ்கர க்ஷேத்திரம், திருக்குடந்தை, குடமூக்கு, தண்டகாரண்ய க்ஷேத்திரம் என்று கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி திருத்தலத்துக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. அதேபோல், இங்கே ஸ்ரீகோமளவல்லித்தாயாராக இருக்கும் ஸ்ரீலக்ஷ்மி பிராட்டிக்கும் ஸ்ரீசாரங்கராஜபெருமாளுக்கும் திருமணம் நடைபெற்ற திருத்தலம் என விவரிக்கிறது ஸ்தல புராணம். ஆகவே, இதனை கல்யாணபுரம் என்றும் அழைப்பார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MZDRnJ
via IFTTT