மதுரை: இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் 18 லட்சம் பேர் பார்வை இழந்துள்ளனர் என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேலு தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேலு தொடங்கி வைத்தார். கண் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் விஜயசண்முகம் மற்றும் துறை மருத்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கண்தானம் செய்வதற்கான வழிமுறைகள், உறுதிமொழி தொடர்பான தகவல்கள் நோயாளிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. களந்திரி, செக்கானூரணி, செல்லம்பட்டி, சமயநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் மற்றும் மதுரை கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nqOzkQA
via IFTTT