கவனம் ஈர்க்கும் வகையில் வேடிக்கையான சைகைகள் மூலம் ‘கூவிக் கூவி’ பழம் விற்கும் வியாபாரியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரெட்டிட் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அது பரவலான வியூஸ்களை பெற்றுள்ளது.
வழக்கமாக சாலை ஓரங்களில் வியாபாரப் பணியை கவனித்து வரும் வியாபாரிகள் ஒரே குரலாக ‘கூவிக் கூவி’ விற்பனை செய்வார்கள். ‘எது எடுத்தாலும் 10 ரூபா’, ‘பொரி உருண்டை’, ‘பாய்’ என பல்வேறு பொருட்களை வியாபாரிகள் உரத்தக் குரலில் விற்பனை செய்வதை நாம் பார்த்திருப்போம். இப்போது வியாபாரிகள் கொஞ்சம் ஸ்மார்டாக மாறிவிட்டனர். ஒலிபெருக்கி உதவியோடு மெமரி கார்டு மூலம் ரிப்பீட் மோடில் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை ஒலிக்கச் செய்கின்றனர். இந்த ஸ்மார்ட் வியாபாரிகளிடம் இருந்து கொஞ்சம் மாறுபட்டு நிற்கிறார் அந்த பழ வியாபாரி. அதற்கு சான்று பின்வரும் அந்த வாடிக்கையாளரின் பதிவு தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qY7l5Ps
via IFTTT