அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் ஐந்தாம் நாளில் காவிப் பட்டாடை அணிந்தவாறு அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
அத்தி வரதர் விழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. கோயிலின் கிழக்கு கோபுரத்தை தாண்டி வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் ஐந்தாம் நாளில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் வரிசையில் நின்று அத்தி வரதரை தரசித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tGM8acX
via IFTTT