89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அத்தி வரதரை தரிசிக்க அலைகடலென திரண்ட பக்தர்கள்

அத்தி வரதரை தரிசிக்க அலைகடலென திரண்ட பக்தர்கள்

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் ஏழாம் நாளில் மஞ்சள் நிறப் பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக, அறநிலையத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த 7 நாட்களில் மட்டும் 7.80 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் விஐபி வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WoBJGNj
via IFTTT