திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம், கூட்டமாக திருமலையில் குவிந்து வருகின்றனர். கரோனா பரவலுக்கு பிறகு திருப்பதி தேவஸ்தானம் வழக்கம்போல் தரிசன டோக்கன்களை வெளியிட்டு வருகிறது.
வரும் செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் தரிசிக்க இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் tirupatibalaji.ap.gov.in எனும் இணைய தளத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இம்மாதம் 12,15 மற்றும் 17-ம் தேதிகளில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்காகவும் இன்று காலை 9 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0OhaQkn
via IFTTT