நாகர்கோவில்: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் 6 மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு 22 அடி நீளத்தில் கடுசர்க்கரை யோகம் என்ற மருந்து கலவையாலான பெருமாள் சயனம் கொண்டுள்ளார். இக்கோயிலில் கடைசியாக 1604-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 418 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அதற்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டன. விமானங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட 7 கும்ப கலசங்கள் தயார் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UeCsSxq
via IFTTT