நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்ட வருகிறது. அதிக வருவாய் உள்ள நாடுகள், நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது. சில உயர் வருவாய் பிரிவு நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் வகையிலான தடுப்பூசிக்கு சம்பந்தபட்ட நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி அளித்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DkYI6mi
via IFTTT