திருப்பதி: கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவங்கள் உட்பட அனைத்து விசேஷ நாட்களிலும் கோயிலுக்குள்ளேயே உற்சவருக்கு ஏகாந்தமாக சேவைகள், பூஜைகள், வாகன சேவைகள் போன்றவை நடத்தப்பட்டன.
இதனால், உற்சவர் வெளியே வந்து சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது என பக்தர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். தற்போது கரோனா தொற்று குறைந்துவிட்டதால் நேற்று உற்சவரான பத்மாவதி தாயார் தங்க தேரில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நேற்று காலை திடீரென தாயார் மாட வீதிகளில் தங்க தேரில் பவனி வருகிறார் என அறிந்ததும் திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தி தாயாரை தரிசித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7FHeXj1
via IFTTT