89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி தொடக்கம்

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

விழாவின் முதல்நாளான நவ. 2-ம் தேதி அதிகாலை ஜெயந்திநாதப் பெருமான் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பகல் 2.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து கிரி வீதி வழியாக உலா வந்து திருக்கோயிலை சேர்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z2GdWiX
via IFTTT