நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை சென்றவர்கள் வந்ததால் கன்னியாகுமரி இன்று களைகட்டியது.
கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் காத்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் சீஸன் காலமான 3 மாதத்திற்கு கன்னியாகுமரியில் அதிகமான ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mpeNHYz
via IFTTT