பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பள்ளி மாணவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையில் மனத்திரையிலேயே கேமை ஓடவிட்டு கைகளை அசைத்து விளையாட முற்பட்ட காட்சி நம்மை வெகுவாக அதிரவைத்தது.ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவதன் உச்சபட்ச பாதிப்பின் சாட்சியாகவே அந்தக் காட்சி இருந்தது.
இப்போது மீண்டும் ஆன்லைன் விளையாட்டுகளின் மோசமான விளைவுகள் குறித்து தெளிவுபெற வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் பெற்றோர் எப்படி அணுக வேண்டும் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து முனைவர் சுடர்க்கொடி கண்ணன் கூறும்போது, "பப்ஜி ( PUBG), ஃப்ரீ ஃபயர் (FREE FIRE), புளூ வேல் (Blue Whale), கேண்டி கிரஷ் (Candy Crush), டெம்பிள் ரன் (Temple Run), ‘பிங் வேல்’ (Pink Whale) போன்ற இணைய விளையாட்டுகளை இளைஞர்கள் அதிகம் விளையாடுகின்றனர். நிஜ உலகிற்கு இணையான 3D கிராபிக்ஸ் காட்சிகள், உயர் தொழில்நுட்பம் போன்றவை பப்ஜி (PUBG) விளையாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த விளையாட்டுகள் வைரலாகப் பரவியது. எந்த இடத்தில் இருந்தாலும் நண்பர்கள் சேர்ந்து, பேசிக்கொண்டே, எந்த செலவுமின்றி, விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும் அனைவரையும் சுட்டு வீழ்த்தி வெற்றியின் அடுத்தடுத்த இலக்குகளை அடையும்போது, நண்பர்கள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் அவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் மேலும் விளையாடத் தூண்டுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/toDQOW5
via IFTTT