தெலங்கானா மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற தேயிலை அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாகவும் தெலங்கானா தேயிலை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, தெலங்கானா தேயிலை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், "ஆரம்பத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தது, ஆனால் தற்போது தெலங்கானா மற்றும் ஆந்திராவிலும் பரவியுள்ளது. இது மற்ற மாநிலங்களிலும் கண்டறியப்படுகிறது" என்கிறார்கள்.
இதனையடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேயிலை தூள் கலப்படம் உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்கான எளிய வழிமுறைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி பி.சதீஷ்குமார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lAKB0i4
via IFTTT