படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் நாளடைவில் தனது பொலிவை இழக்கும் என்பது இயற்கை விதி. மனிதனும் மனமும்கூட இவ்விதிக்கு அப்பாற்பட்டவையல்ல. ஈமான் என்ற நம்பிக்கை சார்ந்தவைகளும் அவ்வாறே. உள்ளமும் உள்ளத்தின் தன்மைகளும் நாளடைவில் பொலிவிழந்து துருப்பிடிக்கும். இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தி உடலையும் உள்ளத்தையும் பண்படுத்தவே நோன்பு மனிதர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
மனிதன் செயலாற்றுவதற்கு இறைவன் உதவி தேவை. இறை உதவி கிடைக்க மனிதனின் ஒத்துழைப்பும் உந்துதலும் தேவை. மனிதனுடைய ஒத்துழைப்பை பொறுத்தேஇறை உதவி அமையும். ‘‘அடியான்என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் அவனிடம் ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்பால் நடந்து வந்தால், நான் அவனிடம் ஓடி வருவேன். என்னை அவன் நெருங்க, நெருங்க அவன் பார்க்கும் கண்ணாக, பிடிக்கும் கரமாக, நடக்கும் காலாக நானே மாறிவிடுவேன்’’ என இறைவன் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oXAx6tN
via IFTTT